15. அருள்மிகு சாரநாதன் கோயில்
மூலவர் சாரநாதன்
உத்ஸவர் மாமதலைப் பிரான்
தாயார் சாரநாயகி
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் சார புஷ்கரணி
விமானம் சார விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருச்சேறை, தமிழ்நாடு
வழிகாட்டி கும்பகோணத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும், நாச்சியார் கோயிலிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.
தலச்சிறப்பு

Tirucherai Gopuram Tirucherai Moolavarபிரளய காலத்தில் பிரம்மா வேதங்களைக் காப்பாற்றும் பொருட்டு, ஒரு குடத்தில் வைத்து காப்பாற்ற முயன்றார். ஆனால் அவை அனைத்தும் உடைந்தன. இறுதியில் மஹாவிஷ்ணுவை வேண்ட, அவரும், திருச்சேறை தலத்திற்குச் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து பானை செய்யச் சொன்னார். பிரம்மனும் இத்தலத்திற்கு வந்து மண்ணை எடுத்து பானை செய்து அதில் வேதங்களை வைத்துக் காப்பாற்றியதாகப் புராண வரலாறு கூறுகிறது.

மூலவர் சாரநாதன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் மாமதலைப் பிரான். தாயார் சார நாயகி (சார நாச்சியார்) என்ற திருநாமத்துடன் தரிசனம் தருகின்றார். சாரநாதன், சார நாயகி, சார புஷ்கரணி, சார விமானம் மற்றும் சார க்ஷேத்திரம் என ஐந்தும் சேர்ந்து இத்தலம் 'பஞ்சசார க்ஷேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது. பகவான் காவிரி அம்மனுக்கு பிரத்யக்ஷம்.

Tirucherai Utsavarஇக்கோயிலில் குளக்கரையில் காவிரி அம்மன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் ஒரு சன்னதியில் காட்சி தருவது சிறப்பு. தைப்பூசத்தன்று நடைபெறும் திருத்தேர் உற்சவத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, நீலாதேவி, மகாலஷ்மி, சாரநாயகி என்று ஐந்து தாயார்களுடன் காட்சி தருவது விசேஷம்.

திருமங்கையாழ்வார் 13 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com